Ad Widget

கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தேர்தல் தொகுதிகளுக்கு தலா 300 இலட்சம்!

கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு தேர்தல் தொகுதிக்கு தலா 300 இலட்சம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் தெரிவித்தார்.

தடைப்பட்டுள்ள அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாவட்ட செயலாளர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

உரிய வழிமுறையின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது, கிராமிய வீதி வேலைத் திட்டங்களை முடிவிற்குக் கொண்டு வரவே எண்ணியுள்ளதாகவும் கூடுதலான நிதியை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Related Posts