Ad Widget

காதலனின் கத்திக்குத்தில் காதலி பலி

மாத்தளை, மஹவெல கலலியத்த பிரதேசத்தில், இளைஞனொருவன் மேற்கொண்ட கத்திக்குத்தில், சுதர்மா குமாரி என்ற யுவதி (வயது 23), உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், நஞ்சு அருந்திய நிலையில், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையிலான காதல் விவகாரமே, இக்கத்திக்குத்துக்கு காரணமென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts