Ad Widget

காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க மகிந்தவின் ஜோதிடரை நாடவுள்ள ரணில்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க ஜோதிடர்களையே நாடவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் போன ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அதிலும் பலவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

இந்தநிலையில் வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான சுமணதாஸவின் உதவியை பெற தாமும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts