Ad Widget

காணாமற்போனவர் சடலமாக மீட்பு!

சுன்னாகம் சூராவத்தைப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தார் என்று கூறப்பட்ட குடும்பஸ்தர் இன்று புதன்கிழமை சடலமாக அயலில் உள்ள வெளிவளவில் இருந்து மீட்கப்பட்டார்.

சூராவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா சிவநாதன் (வயது – 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த காணியில் சடலத்தை அவதானித்த அயலவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கும், கிராம அலுவலருக்கும் தெரியப்படுத்தினர்.

இது சம்பந்தமாக மல்லாம் நீதிமன்றத்துக்கு பொலிஸார் கொடுத்த தகவலைத் தொடர்ந்து நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

Related Posts