Ad Widget

காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்து கொலை

dead-footகாஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசித்து வந்த புனிதவதி (வயது 44). என்ற 3 பிள்ளைகளின் தாயரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது

இவர் கடந்த 30 வருடத்துக்கு முன் இலங்கையில் இருந்து தனது குடும்பத்தடன் அகதிகளாக சென்று காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர்.

இந் நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் குறித்த பெண்ணான புனிதவதி அதே பகுதியில் உள்ள தனது அக்காவின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் பின்னர் நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வரhததை தொடர்ந்து புனிதவதியின்
கணவர் அக்கா வீட்டிற்கு சென்று விசாரித்த போது அவர் இங்கிருந்து சென்று பல மணி நேரம் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்

இதையடுத்து புனிதவதியை பல இடங்களில் தேடி அலைந்த குடும்பத்தினர் பின்னர் தமது வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கரை புதரில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையில் உருட்டுக்கட்டையால் அடித்து புனிதவதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts