Ad Widget

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 50 ஏக்கர் காணி!!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 50 ஏக்கர் நிலப்ரப்பினை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கமாறு துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகத்துக்கு அருகில் உள்ள 15 ஏக்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான காணி ஒன்றை 52 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டமைக்கு அமைவாக பொறுப்பேற்பதற்கும் தனியார் உரித்துடைமையின் கீழ் மேலும் 32 ஏக்கர் காணிக்கு இழப்பீட்டை செலுத்தி காணியை பெற்றுக்கொள்ளும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக பொறுப்பேற்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related Posts