Ad Widget

காங்கேசன்துறை கடற்படை சிப்பாய் பாலியல் குற்றச்சாட்டில் கைது

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணிப்புரியும் கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் 33 வயதான இந்த கடற்படை சிப்பாய் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

13 வயதான பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சந்தேகநபர் தனது ஆடைகளை அவிழ்த்து காட்டியதாக மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளதுடன் அவர்கள் சம்பவம் குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில், சந்தேக நபரை கைது செய்துள்ள காவற்துறை அவரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்

Related Posts