Ad Widget

காங்கேசன்துறையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு!!

காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்று திறந்துவைத்தார்.

கடற்கரையில் குளிக்கும் போதும், விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts