Ad Widget

காங்கசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு : 8 பேர் கைது

காங்கசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பை திருடிய தொழிற்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்து சுமார் ஒரு தொன் திருடப்பட்ட இரும்பை லொறியில் ஏற்றிச் சென்ற வேளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தொழிற்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்த திருட்டைச் செய்தமை தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காங்கசந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts