Ad Widget

கழிவு எண்ணெய் கலந்த நீரை குடிக்கலாமா கூடாதா? மக்கள் கேள்வி

நிலத்தடி நீரில் மாசு தொடர்பில், இன்று காலை சுன்னாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

chunnakam

இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால், சுன்னாகம் அதனை அண்டிய சுற்று வட்டார பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கலந்துள்ளது என முறைப்பாடுகள் எழுந்தன.

இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.மின்நிலையமும் மூடப்பட்டது.

இதேவேளை, இப்பிரச்சினை தொடர்பாக நிபுணர் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, குறித்த நிலைமைகளை ஆராய்ந்து, குடிநீரில், கழிவு எண்ணெயின் பாதிப்புக்கள் இல்லையென்று அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள்.தமது நீர் மாதிரிகளில் 50 வீதமானவற்றில் அதிகளவு நைத்திரேற்றுக் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததுடன்,மலக்கிருமிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நீரை சுடவைத்துப் பருகலாம். ஆனால் நைத்திரேற்று தாக்கத்தை தணிக்க சாதாரணமான வழிகள் இல்லை. எனவும் சுட்டிக் காட்டியிருந்தது

ஆனாலும் நீர் குடிக்க முடியுமா? இல்லையா? என்பது குறித்து, அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை. நீரில் எண்ணை நச்சுக்கள் இல்லை. ஆனால் நைத்திரேற்று மற்றும் மலக்கிருமிகள் ஆபத்தான அளவில் காணப்படுகின்றது.எனவே இந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியுமா? என்பதை சுகாதார அமைச்சும் நீர்வழங்கல் அமைச்சுமே முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனவே, குறித்த நீரை பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பில், அரசாங்கம் தமக்கு சரியான பதிலைத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தே, குறித்த கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

Related Posts