Ad Widget

கலந்துரையாடலுக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்ற விண்ணப்பப் படிவங்கள்!

வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் – விசனமும் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

valikamam-educaion-office

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவருவதாவது:

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஆசிரியர்கள் சென்றபோது கலந்துரையாடல் எதுவும் நடத்தாமல் வன்னிப் பிரதேசத்திற்கான இடமாற்ற படிவங்கள் வழங்கப்பட்டன.

எந்த வகையான திட்டமிடலும் இன்றி ஏற்கனவே வன்னி மாவட்டத்தில் கடமையாற்றியவர்கள், இடமாற்ற வயதைக் கடந்தவர்கள் உட்பட அனைவருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டன என்றும், இதனால் தாம்அதிருப்தியும் – விசனமும் அடைந்தனர் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Posts