தலைமன்னார், ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் மரத்தில் செதுக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை கரையொதுங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (10) மாலை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர்,குறித்த இடத்துக்குச் சென்று சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட மரத்தினால் செதுக்கப்பட்ட குறித்த மனித உருவம் கொண்ட சிலை, சுமார் 5 ½ அடி உயரம் கொண்டதாகவும் மிகவும் பழைமை வாய்ந்ததாகவும் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர், மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.