Ad Widget

கருணா அம்மானுக்கு அரச பொது மன்னிப்பு!! – மகிந்த ராஜபக்‌ஷ

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று தமிழ் செய்தியாசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதில் தவறு உள்ளது.

அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கருணா அம்மானுக்கு அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில்வழங்கிய பிரதமர், அவருக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாத போதும், பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என்று கூறினார்.

இவ்வாறு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என இதன்போது, கேள்வி எழுப்பப்பட்டது.

விடுவிக்க முடியாத குற்றவியல் தொடர்புடைய பலர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுள் உள்ளடங்குவதால் அவர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என பிரதமர் இதற்கு பதில் வழங்கியுள்ளார்.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மையில் பிரதமரிடம் கையளித்த அரசியல் கைதிகளின் பெயர் விபரப்பட்டியல் குறித்தும் வினப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் காலத்தில் அதுகுறித்த முன்னெடுப்புகள் இடம்பெறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளா

Related Posts