Ad Widget

கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

வலி. வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருகம்பனை பிரதேச மக்களின் நன்மை கருதி வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆயுள் வேத வைத்தியசாலை இன்று புதன்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தனியார் கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆயுள் வேத வைத்தியசாலையை வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி பா. சத்தியலிங்கம் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன், சுதேச வைத்தியசாலைகளின் வட மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி சியாமா துரைரத்தினம், இணைப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி ஜெ.கனகேஸ்வரி, வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ஆர்.கஜமாலினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts