Ad Widget

கரப்பான்பூச்சியை கண்டு பயந்த வௌிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் : யாழில் இளைஞர் கைது

கரப்பான்பூச்சியை கண்டு பயந்த கொங்கொங் நாட்டுப் பெண்ணுக்கு உதவுவது போல் பாலியல் சில்மிஷம் செய்ய முற்பட்ட ஒருவர் யாழப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார். இதன்படி வாடகைக்கு வந்திருந்த கொங்கொங் நாட்டு பெண் ஒருவர் அறைக்குள் சென்ற போது, கரப்பான்பூச்சியைக் கண்டுள்ளார்.

எனவே அலறியடித்துக்கொண்டு அங்கிருந்த ரூம் போயிடம் இதனை தெரிவித்துள்ளார். பின்னர் கரப்பான்பூச்சிக்கு மருந்து அடிக்க வந்த இளைஞர் பெண்ணை கட்டிப் பிடித்து தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த போது, அப் பெண்மணி 119 மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அத்துடன், குறித்த வீட்டிற்கு பொலிஸார் செல்லும் வரை அந்த வெளிநாட்டுப் பெண்மணி கத்தியுடன், குளியலறைக்குள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர், பொலிஸாரின் சீருடையினை கண்ட பெண் வெளியே வந்து நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைத்துச் சென்றதுடன், சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர்.

Related Posts