கனேடியப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியிலிருந்து யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த கனேடியப் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி கனேடியப் பிரதிநிகள் இச்சந்திப்பிற்கு முன்னதாக யாழ்.ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.