உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன் வடக்கு முதலமைச்சர் க.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் சந்தித்தார்.
நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த அவர் ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன, வெளிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரை தனித்தனியே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.