Ad Widget

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞர் கட்டுநாயக்கவில் கைது!

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வேறு ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரும்பிராய் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Related Posts