Ad Widget

கனகாம்பிகைக்கு 600லட்சத்தில் 99 அடி உயர இராஜகோபுரம்

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழ்கிழமை 14-07-2016 நடைபெற்றது.

kilinochchi-amman

காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார் நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் சுதாகரன், கரச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் , உத்தியோகத்தர்கள், குருக்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி இருந்தனர்.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் இடது கரையில் மேற்குப் புறமாகவும் இரணைமடு நீர்த்தேக்கத்தினையே தீர்த்தக் கேணியாகவும் கொண்டு அமைக்கப்பட்ட இவ் ஆலயத்திற்கு 99 அடி உயரமும் 36 அடி அகலத்தை கொண்டு நவ தளங்களுடன் கூடிய இராஜ கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவே நடை பெற்றது இவ் இராஜகோபுரத்தினை ஆறு கோடி செலவில் இரண்டு வருடங்களிற்குள் முடிக்க இருப்பதாகவும் இதற்கான பணத்தினை புலம்பெயர் உறவுகள் மற்றும் வடக்கு வாழ் மக்களிடம் இருந்து எதிர் பார்ப்பதாகவும் ஆலய பரிபாலன சபையினரும் ஆலய இராஜகோபுர திருப்பணி சபையினரும் தெரிவிக்கின்றனர் இரனைமடு கணகாம்பினை அம்மன் ஆலயம் யோகா் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட கோவில் எனக் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts