Ad Widget

கண்டாவளை பிரதேச செயலரை மாற்றும்படி கோரிக்கை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தனை மாற்றும்படி நாதன்திட்டம் மற்றும் புன்னைநீராவி மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் புதன்கிழமை (11) கோரிக்கை முன்வைத்தனர்.

தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவிலே பொதுமக்கள் இந்தக்கோரிக்கையை முன்வைத்தனர்.

எல்லா விதத்திலும் தங்களை அவர் புறக்கணிப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு பின்னால் நின்றுகொண்டு அதிகார துஸ்பிரயோகம் செய்கிறார் என பொதுமக்கள் கூறினர்.

பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனத்தில் எடுத்து விசாரணைகளை மேற்கொள்வதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் பொதுமக்களுக்கு கூறினார்.

Related Posts