Ad Widget

அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா! ரங்காவும் சென்றார்

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்கா, முன்னாள் சிறைச்சாலை புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பாளர் எமில்.ஆர்.லியனகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் விஜயகலா முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் கண்டு அவர்களது துயரங்களைக் கேட்டார்.

குறித்த 8 கைதிகளில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டோர் அடங்குகின்றனர். இவர்களில் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியும் அடங்குவார். rangaபயங்கரவாத தடுப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பூஸா தடுப்புக் காவலில் பல மாதங்களாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

பெண் அரசியல் கைதிகள் அனைவரும் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பிரதி அமைச்சர் விஜயகலாவிடம் கோரியுள்ளனர். இவர்களுடன் நீண்ட நேரமாகக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் குறித்த கைதிகளின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.

 

Related Posts