Ad Widget

கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்

வட்டுக்கோட்டை மேற்குப் பகுதியில் 1,000 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், நேற்றுப் புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர், கடந்த 10ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் 850 கிராம் கஞ்சாவுடன் 41 வயதுடைய நபரொருவரை, நேற்று (12) வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு கஞ்சாவை எடுத்துச் சென்று அங்கு வைத்து, அதனை கைமாற்றும் பொருட்டு கொண்டு செல்லும் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

Related Posts