Ad Widget

கசூரினாக் கடற்பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

dead_water_bodyகாரைநகர் கசூரினாபீச்சில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த 32 வயதான ஜெயகுரு என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவல்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts