யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஓட்டோ – தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பிரதான வீதியும் முதலாம் குறுக்குத் தெருவும் இணையும் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே மரணமாகினர்.
இருவரும் பயணித்த ஓட்டோ பிரதான வீதியில் இருந்து குறுக்குத் தெருவுக்கு செல்ல முற்பட்டபோதே யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டோவின் பின்புறமாக மோதியது.
இதனால் ஓட்டோவை செலுத்தியவரும் பின்னிருக்கையில் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.