‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்’ எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் நேற்று (13) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார, துலீப் சேமரத்தன மற்றும் சாரதா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட செயலர் ம.பிரதீபன், புகையிரத நிலைய அதிபர் பிரதீபன், பிரதேச செயலர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகையிரதத்தில் வந்தோரை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து புகையிரதத்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கான தொலைக்காட்சி பெட்டியொன்றையும் அன்பளிப்பு செய்தனர்.