Ad Widget

ஏட்டிக்குப் போட்டியாக குழுக்களை நியமிக்காது ஒத்துழைக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்­டிக்­குப்­போட்­டி­யா­கவே அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோ­சனை வழங்குவதற்கு மூவ­ர­டங்­கிய சர்­வ­தேச நிபு­ணர்­ கு­ழுவை நிய­மித்­துள்­ள­து.

யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் சர்வதேச விசாரணைக்கு இடையூறுகளை ஏற்படுத்தாது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேன­ாதி­ராஜா தெரிவித்தார்.

TNA-logo

அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவில் நம்­பிக்­கை­யீ­னங்கள் காணப்­ப­டு­கின்­ற­போதும் உரிய அழைப்பு விடுக்­கப்பட்டால் அந்தக் குழுவினரை சந்திப்பது குறித்து பரி­சீ­லிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

காண­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள மூன்று பேர­டங்­கிய சர்­வ­தேச நிபு­ணர்­கு­ழுவை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு சந்­திக்­குமா? என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­களைமேற்­கொள்­வ­தற்­காக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம் நிபுணர் குழுவை நிய­மித்­துள்­ளது. வௌிநா­டு­களின் தலை­யீட்டை நாம் விரும்­ப­வில்லை என்றும் போலிக்­கா­ர­ணத்தை கூறி அக்­கு­ழுவை நாட்­டுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது என அர­சாங்கம் உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் சர்­வ­தேச ரீதி­யாக இந்­த­வி­வ­காரம் மேலும் வலு­வ­டைந்தால் தமக்கு நெருக்­கடி நிலைமை உரு­வாகும் என்ற அச்­சத்தின் கார­ணத்தால் காணமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக மூன்று நிபு­ணர்­களைக் கொண்ட சர்­வ­தேச குழு­வொன்றை அரசாங்கம் நிய­மித்­துள்­ளது. இந்த நிய­ம­ன­மா­னது வெறு­மனே ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஏட்­டிக்­குப்­போட்­டி­யாக செய்­யப்­பட்­ட­தொன்­றாகும்.

அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் ஹெக­லிய ரம்­புக்­வெல ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு நிபு­ணர்­குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போதும் அந்த ஆலோ­ச­னை­களை ஏற்­றுக்­கொள்­வதா? இல்லை நிரா­க­ரிப்­பதா? என அர­சாங்­கமே இறு­தித்­தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

அவ்­வ­ரா­றன நிலையில் அர­சாங்கம் நிய­மித்­துள்ள இந்த சர்­வ­தேச நிபு­ணர்­கு­ழுவின் மீது நாம் எவ்­வாறு முழ­மை­யான நம்­பிக்கை வைக்க முடியும். எனினும் காண­மல்­போனோர் தொடர்­பாக விசாரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அதற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான நிபு­ணர்­குழு ஆகி­ய­வற்றின் மீது நம்­பிக்­கை­யீனம் காணப்­ப­டு­கின்ற போதும் சந்திப்புக்கான அழைப்பு விடுக்­கப்­பட்டால் அது­கு­றித்து அத்­த­ரு­ணத்தில் உரிய வகையில் பரி­சீ­லனை செய்வோம்.

தற்­போது பலஸ்­தீனில் இடம்­பெறும் குற்­றங்­க­ளுக்கு ஐ.நா. தலை­யிட்டு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என அர­சாங்கம் வலி­யு­றுத்­து­கின்­றது. அவ்­வா­றானால் இங்கு இடம்­பெற்ற விட­யங்கள் தொடர்பில் ஏன் ஐ.நா.மனித உரிமைப் பேர­வையால் நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ரணைக் குழு பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கா­தி­ருக்­கின்­றார்கள். யுத்­தக்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையான அக்றையை அரசாங்கத்தரப்பு கொண்டிருப்பார்களேயானால் அவ்வாறான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அரசாங்கம் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதனை தவிர்த்து நெருக்கடிகளை குறைப்பதற்காக ஆணைக்குழுக்களையும், நிபுணர்குழுக்களையும் நியமிப்பதால் எவ்விதமான பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்றார்.

Related Posts