Ad Widget

ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள்: எடுத்தது யார் தெரியுமா?

ஹாலிவுட்டின் எவர்கிரீன் அழகி, அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆணையத்தின் சிறப்புத் தூதர், பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பின் இணை நிறுவனர். உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர் என்று பன்முகங்கள் கொண்ட ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி தைரியமான பெண் ஆளுமையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள ஏஞ்சலினாவின் கணவர் பிராட் பிட்தான் இந்தப் படங்களை எடுத்துள்ளார். இத்தனைக்கும் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது 2008-ம் ஆண்டில். அப்போது புகைப்படக்கலை பற்றி அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் வேறு எந்த புகைப்படங்களிலும் இல்லாத அளவிற்கு ஏஞ்ஜலினாவின் அந்தரங்க வாழ்வின் அற்புதமான தருணங்கள் இந்த புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

enjal-lenoo- (1)

enjal-lenoo- (2)

Related Posts