Ad Widget

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: பேருந்து கட்டணங்களும் அதிகரித்தது

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பேருந்து கட்டங்களை அடுத்த வாரத்தில் இருந்து, 10 விகிதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் முடிவு செய்துள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பேருந்து கட்டங்களின் மிக குறைந்த கட்டணமான 10 ரூபாவிலும் அந்த மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்களையும் அதிகரிப்பது தொடர்பில் தனியார் பேருந்து சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Related Posts