Ad Widget

எம்.பி.யின் வாகனத்தில் மோதுண்ட முதியவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பேச்சியம்மன் கோயிலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் மரணமடைந்து விட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (வயது 62) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்திலேயே முதியவர் பகல் 2 மணியளவில் மோதுண்டுள்ளார். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர், புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வாகத்தின் சாரதியை கைது செய்துள்ள காத்தான்குடிப் பொலிஸார், எம். பி பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

வாகன சாரதி குமாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts