காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி இன்று காலை முதல் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே,
நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத்தருவாயா? ,
தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம்,
எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா??
போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.