Ad Widget

எனது இமாலய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது: அனந்தி

நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

ananthy-sasikaran

யாழ்.ஊடக அமையத்தினால் உருவாக்கப்பட்ட தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இமாலய வெற்றி எனக்கு கிடைக்காமை எனது வாழ்வில் விழுந்த பெரிய அடியாகும். இருந்தும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் ஊடகங்களினாலேயே கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்காக 87 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இராசாவின் தோட்ட வீதியில் அமைக்கப்பட்ட இந்த கேட்போர் கூடத்தை மூத்த ஊடகவியலாளர்கள் இராதையன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்வில் ஊடகவியலாளர்களிற்கான நேர்காணல் தொடர்பான விசேட செயலமர்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts