Ad Widget

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 100,000 வேலை வாய்ப்புக்கள்!

எதிர்வரும் 05 வருடங்களுக்குள் 100,000 வேலை வாய்ப்புக்களை நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேசிய இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் – இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் மட்டுமன்றி முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்படும், கல்வித்துறை பலமாக்கப்படும், இவை எல்லாவற்றையும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அடுத்த தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது எமது நாட்டில் புதிய ஆட்சி மாற்றத்தின் கீழ் பாரிய புரட்சி ஒன்று ஆரம்பித்துள்ளது. இப் புரட்சியானது எமது நாட்டினை லஞ்சமற்ற ஊழலற்ற, மோசடிகளற்ற நாடாக உருவாக்கிய பின்னரே ஓய்வடையும். இந்நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தினை வழங்க ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே முடியும். அத்துடன் இந்நாட்டின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்தே நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடியதாக அமைந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஸிம், தேசிய இளைஞர் முன்ணணியின் தலைவர் அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts