Ad Widget

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts