Ad Widget

எதிர்பார்ப்பைவிட பன்மடங்கு மக்கள்! உபசரிப்பில் தடங்கல் குறித்து மனம் வருந்துகின்றோம் – ஈபிடிபி

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் (02) நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அழைப்பின் பேரில் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டிருந்த பெருந்திரளான எமது மக்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,

அதேநேரம், தாம் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு அதிகமாக மக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்திருந்தமை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய தமக் கிடைத்த பாரிய வெற்றியாகும் என்பதுடன் இவ்வாறு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையினால் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன் பிரகாரம் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் உபசரிக்க இயலாமற் போனமை தொடர்பில் தாம் பெரிதும் மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ்சின் ஒருங்கிணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்)

Related Posts