Ad Widget

எதிர்கால அரசியல் குறித்து முடிவெடுக்கவில்லை – கமல்

தற்போதைய அரசியல் மாற்றத்தை கருத்திற்கொண்டு எதிர்கால அரசியல் சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படும். அதுவரையில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளும் முடிவு எதனையும் எடுக்கவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை செய்யவில்லை என வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தொவித்தார்.

Kamal

யாழ்.மேல் நீதிமன்றம் கமலேந்திரனை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதற்கு வியாழக்கிழமை (26) அனுமதி வழங்கியதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நல்ல நிலத்தில் போட்ட நல்ல விதை நல்ல பயிராகவே முளைக்கும் என பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது போலவே இன்று உண்மைக்கு உரிய நியாயமும் மரியாதையும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் நல்லதையே செய்யும் என்றார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கமலேந்திரன், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷிசன் கொலைச் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையால் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts