Ad Widget

எதிரணியின் வடக்குக்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் 30இல் ஆரம்பம்

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வடக்குக்கான தேர்தல் பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

maithripala-sirisena

30ஆம் திகதி காலையில் மன்னாரிலும், மதியம் வவுனியா கலைமகள் வித்தியாலயத்திலும், பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பிலும் இந்த பரப்புரைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது எதிரணியை ஆதரிக்கும் சிறுபான்மை கட்சிகள் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்கள் இந்த பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts