Ad Widget

ஊவா வெல்லச பல்கலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கண்மூடித் தனமாகத்  தாக்குதல் நடாத்தியுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த 7 தமிழ் மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து 2 ஆம் வருட மாணவர்களுக்கான விடுதிகள் மூடப்பட்டு அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts