Ad Widget

ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம்

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

kili-uttu-bridgepalam

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள, ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் தற்போது இவ்வருட நடுப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடாக தற்காலிகமாக ஒடுக்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

அதற்கான மண் அணைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து இலகுவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாலமும், மண் அணையும் உடைக்கப்படும் அபாய நிலையில் இருக்கின்றது.

குறித்த பாலம் உடைக்கப்படும் பட்சத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களின் கிளிநொச்சி ஏனைய பிரதேசங்களுடனான தொடா்புகள் துண்டிக்கப்பட்டு தனித் தீவுக்குள் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டு விடும்.

எனவேதான் இந்த நிலைமைகளை தவிர்க்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு, படகு போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரும் பிரதேச மக்கள் அமைப்புகளுடன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

Related Posts