Ad Widget

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பான குற்றசாட்டின் சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த தவணையின்போது குறித்த வழக்கு விசாரணையை குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், இதுவரை குற்றபுலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பொறுப்பேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் மனைவியான ஹம்சிகா என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts