Ad Widget

ஊரடங்குச் சட்ட காலத்தில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை 16 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 9 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராவை. கோப்பாய், சாவகச்சேரி வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறை பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அத்தோடு ராணுவத்துக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை ஆனையிறவு இராணுவ சோதனை சாவடி படையினர் தொடர்பாகவும் மற்றையது பூநகரி பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.

ஏனைய முறைப்பாடுகள் சமுர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பில் அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் பொதுமக்களால் பதியப்பட்டிருக்கின்றது. பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளன” என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

Related Posts