Ad Widget

ஊடகவியலாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை – அரசாங்க அதிபர் 

dak-suntharam-arumainayagam-GAஊடக நிறுவனங்களில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றுபவர்களின் ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அத்துடன் சுயாதீன ஊடகவியலாளர்கள் தமது ஆவணங்களை மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அரசாங்க அதிபர் கோரியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிடைத்தவுடன் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு ஏற்ப பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts