Ad Widget

ஊடகவியலாளர்களிற்கு கடன் திட்டம் : விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத வட்டியிலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஊடக நிறுவனங்களில் மூன்று வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்த 60 வயதிற்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.

நிரந்தர, பகுதிநேர, சுதந்திர, பிராந்திய, இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.

முகவரி:
ஊடக பணிப்பாளர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொல்ஹேன்கொட, நாரஹென்பிட்டி.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியாகும்.

Related Posts