Ad Widget

ஊடகக் குரலை நசுக்காதே!,யாழில் ஆர்ப்பாட்டம்

ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது

1

வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களை சிறையிலடைக்கும் அரசினது சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,கஜதீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts