Ad Widget

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கிவைப்பு

cash-money-paymentமஹிந்த சிந்தனையின் கீழான ‘சிசுதிரிய’ வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வருமானம் குறைவாகப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள 500 பாடசாலை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ரூபா 5,000 வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts