Ad Widget

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரியாத் பதியூதீன் கைது!!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதில் கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த மாத இறுதியில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக ரியாத் பதியூதீன், புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று இன்று மாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts