2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப் பரீட்சையில் மொத்தமாக 3லட்சத்து 37 ஆயிரத்து 704 மாணவர்கள் வரை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும், பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.