கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பெண் உப தபாலதிபர் தனது துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் கைப்பையை வைத்தவாறு, மகனை பின்னுக்கு ஏற்றியவாறு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் இருந்த கைப்பையை அபகரித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
கைப்பையினுள், அலுவலக பணம், அவரின் சொந்த பணம் என ஒரு தொகை பணமும், முக்கிய ஆவணங்கள் சிலவும் இருந்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.