Ad Widget

உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு?

சமையல் எரிவாயுவிலை அதிகரித்த போதிலும், தமது உற்பத்திகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே ஏராளமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் விலையை திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்திருந்தது.

விலையை திருத்தம் மேற்கொள்ளப்பட்டாவிட்டால் மீதமுள்ள சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்படலாம் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts