Ad Widget

உணவக உரிமையாளர் மீது தாக்குதல்!

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்த மூவர் கடை உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:-

குறித்த உணவகத்தின் முன்பாக வாகனம் ஒன்றை நிறுத்தியவர்களுக்கும், கடை உரிமையாளருக்குமிடையில் நேற்று மாலை வாக்குவாதம் ஏற்றபட்டுள்ளது.

இதன் பின்னர் இரவு 7 மணியளவில் கடைக்கு வந்த மூவர் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திவிட்டு கடை உரிமையாளரைத் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது புலேந்தி (வயது- 27) என்பவர் அடிகாயங்களுக்குள்ளானார். இந்த தாக்குதல் குறித்து கடை உரிமையாளர் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts