Ad Widget

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாடு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது சிறப்பு மாநாடு, இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று (19) ஆரம்பமாகியது.

eprlf

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில், ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் கட்சியைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களன கந்தையா சர்வேஸ்வரன், எஸ்.சிவமோகன், துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும், கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டினைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (20), யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடனான மாநாடு இடம்பெறவுள்ளது.

Related Posts